உடைந்த கனவுகள் - உள்ளக்குமுறல்
என் உயிரில் கலந்து,
பின்பு என்னை விட்டு பிரிந்து,
என்னை ஒரு ஜடமாய் விட்டாயே என் அன்பே.
நாம் கண்ட கனவுகள்,
நம்முள் இருந்த ஏக்கங்கள்,
எல்லாம் ஒரு கண்ணாடி குவளை போல்
உடைந்து போனதடி.
உன்னை கட்டியணைக்கவும் எனக்கு கூடவில்லை,
உன்னை முத்தமிடவும் எனக்கு கிட்டவில்லை,
உன் கண்ணில் வழியும் கண்ணீர்
துடைக்கவும் முடியவில்லை.
உன் நெற்றியில் நான் முத்தம் இட வேண்டும்
உன் மார்பில் நான் சாய வேண்டும்,
என் மடியில் நீ தூங்க வேண்டும்,
உனக்கு தாலாட்டு நான் பாட வேண்டும்.
உன்னை செல்லமாய் நான் திட்ட வேண்டும்,
நீ விளையாட்டாய் கோவப்பட வேண்டும்,
என் நெஞ்சில் சாய்ந்து பல கதைகள்
நீ பேச வேண்டும்.
ஆனால் பெண்ணே நீ என்னை விட்டு
சென்ற பின்னே எல்லாம் ஒரு கனவாய் போனதடி
என் உயிர் நிலை குலைந்து,
என் திசை தடம் புரண்டு,
என் நா வரண்டு,
நீ பிரிந்தது ஒரு கனாவாய்
இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி,
உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேனடி...
ஆகா ...கண்ணாடியில் கல்ல உட்டுடாங்களே...
பதிலளிநீக்குஒக்கே ஒக்கே....
படைப்பாளிக்கு பாராட்டுக்கள்
6 மாதங்களுக்கு பின் கனவுகள் உடைந்து உள்ள குமுறலுடன்...
பதிலளிநீக்குமனசாட்சி™ சொன்னது…
பதிலளிநீக்குஆகா ...கண்ணாடியில் கல்ல உட்டுடாங்களே...
ஒக்கே ஒக்கே....
படைப்பாளிக்கு பாராட்டுக்கள்
6 மாதங்களுக்கு பின் கனவுகள் உடைந்து உள்ள குமுறலுடன்...//////
மிக்க நன்றி நண்பரே, கடந்த பதிவிற்கு தொடர் பதிவாக தான் இதை பிரசுரித்தேன், இது அந்த ஆணின் உள்ளக்குமுறல்..
welcome back :)
பதிலளிநீக்குnice post
//நீ பிரிந்தது ஒரு கனாவாய்
பதிலளிநீக்குஇருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி//
பிரிவின் கொடிய வேதனையை இன்றும் நான் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.பிரியமானவர்களுக்கிடையில் பிரிவு என்றுமே கொடுமை.
very nice to feel in man to women
பதிலளிநீக்குArun Kumar சொன்னது…
பதிலளிநீக்குwelcome back :)
nice post
Thank you very much.. :)
சித்தாரா மகேஷ். சொன்னது…
பதிலளிநீக்கு//நீ பிரிந்தது ஒரு கனாவாய்
இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி//
பிரிவின் கொடிய வேதனையை இன்றும் நான் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன்.பிரியமானவர்களுக்கிடையில் பிரிவு என்றுமே கொடுமை.//////
ஆம் பிரிவின் கொடுமையை வரைவிலக்கணப்படுத்த வார்த்தைகளால் முடியாது.. அதை உணர்பவருக்கே வேதனையும் வலியும் புரியும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி..
புதுத்தமிழ் ப.லோகேசு சொன்னது…
பதிலளிநீக்குvery nice to feel in man to women
thank you friend..