இடுகைகள்

ஏப்ரல், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உடைந்த கனவுகள் - உள்ளக்குமுறல்

படம்
உன்னை மறக்க முடியாமல் துடிக்கிறேனடி, என் உயிரில் கலந்து, பின்பு என்னை விட்டு பிரிந்து, என்னை ஒரு ஜடமாய் விட்டாயே  என் அன்பே. நாம் கண்ட கனவுகள், நம்முள் இருந்த ஏக்கங்கள், எல்லாம் ஒரு கண்ணாடி குவளை போல் உடைந்து போனதடி. உன்னை கட்டியணைக்கவும் எனக்கு கூடவில்லை, உன்னை முத்தமிடவும் எனக்கு கிட்டவில்லை, உன் கண்ணில் வழியும் கண்ணீர் துடைக்கவும் முடியவில்லை. உன் நெற்றியில் நான் முத்தம் இட வேண்டும் உன் மார்பில் நான் சாய வேண்டும், என் மடியில் நீ தூங்க வேண்டும், உனக்கு தாலாட்டு நான் பாட வேண்டும். உன்னை செல்லமாய் நான் திட்ட வேண்டும், நீ விளையாட்டாய் கோவப்பட வேண்டும், என் நெஞ்சில் சாய்ந்து பல கதைகள் நீ பேச வேண்டும். ஆனால் பெண்ணே நீ என்னை விட்டு சென்ற பின்னே எல்லாம் ஒரு கனவாய் போனதடி என் உயிர் நிலை குலைந்து, என் திசை தடம் புரண்டு, என் நா வரண்டு, நீ பிரிந்தது ஒரு கனாவாய் இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி, உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேனடி...