இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்ல டா சாமி..

படம்
வை மீ லோர்ட்??? இந்த உலகத்துல தன்னோட வேலைய பார்க்காம அடுத்தவன் விஷயத்தில தலையிடும் புண்ணியவான்கள் நிறையவே இருக்காங்க. அது வெளியில மட்டுமில்லைங்க நம்ம வீட்ல கூட இருப்பாங்க. வெளில சொன்னாலும் சொல்லட்டியும் நம்ம எல்லாருக்கும் அந்த மாதிரி அனுபவங்கள் நிறையவே இருக்கும்.. அவங்க பாட்டுக்கு ஏதோ சொல்லி நம்மள குழப்பி விட்டுட்டு போயிருவாங்க ஆனா கடைசியா நம்ம தலை தான் டைம் போம் மாறி இப்போ வெடிக்குமோ அப்போ வேடிக்குமொனு ஆகிடும். என்ன கொடும சரவணன் இது.. இதோ சில நொந்து நூல் ஆகிய சந்தர்ப்பங்கள்.. நாம பாட்டுக்கு வீட்ட பூட்டிட்டு சிவனேன்னு வெளிய போய்கிட்டு இருப்போம், அப்ப வந்து கேப்பாங்க பாருங்க, புண்ணியவான் :  ஒழுங்கா வீட்ட பூட்டினியா??????? நாம : !@#$%^&* ஒரு தூரப்பயணம் புறப்பட்டு போகும் போது நாம நமக்கு தேவையான எல்லாத்தையும் கரெக்டா எடுத்து வச்சி தான் இருப்போம், ஆனா நம்மள வழி அனுப்ப வாரவங்க இருக்கங்களே, அதை எடுத்தியா இதை எடுத்தியான்னு கேட்டே நம்மள கன்பியுஸ் பண்ணிருவாங்க. எப்படியாவது கஷ்டப்பட்டு நாம ஒரு நல்ல தொழில் தேடி கடவுளேன்னு அதுக்கு போய்கிட்டு இருப்போம், ஆனா நம்ம புன்னியவான்ஸ் இருக்கங்கள

க்ரீஸ் மேன்... பீ கேர்புல்... (Grease Man - Be Careful)

படம்
இலங்கையில் தீவிரவாதிகளை பார்த்து பயந்ததை விட மக்கள் அதிகமாக பயப்படுவது இந்த கிரீஸ் மனிதர்களுக்கே.. அதென்னடா அது "கிரீஸ் மனிதன்" என்று முழிக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்காக இதோ கிரீஸ் மனிதன் பற்றி சிறியதொரு அறிமுகம்.. இலங்கையில் பல பிரதேசங்களில் இரவினில் உடம்பு முழுவதும் கிரீஸ் (Grease) பூசிக்கொண்டு தனிமையில் செல்லும் பெண்களை தாக்கும் இந்த கிரீஸ் மனிதன் பல வன்முறை சம்பவங்களுக்கு மூல கர்த்தாவாக திகழ்கிறான். பலர் பலவிதமாக கதைகள் கூறினாலும் கூட, உண்மையாகவே இந்த கிரீஸ் மனிதனால் பாதிக்க பட்ட பெண்கள் சிலர் உடல் பாகங்களை கூட இழந்தது மிக வருத்ததிட்குரியதாகும். எது எவ்வாறாயினும் இந்த கிரீஸ் மனிதர்களின் அட்டகாசத்தால் சில பல பெண்கள் வெளியில் செல்வதை கூட தவிர்த்தனர். ஒரு சில இடங்களில் தனி ஆளாகவும், இன்னும் சில இடங்களில் கூட்டமாகவும் உலா வரும் இந்த மர்ம மனிதர்கள் (இவர்களை மனிதர்கள் எனது கூறலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் எழுதுகிறேன் - யாரும் புண்ணியவான் இருப்பின் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்) அரசாங்கத்தின் உதவியுடன் இக்காரியத்தை செய்வதாக பல கதைகள் தோன்றி மறைகின்றன, சிலர் நம் ஜனாதிபதிக்க

படித்ததில் பிடித்தவை...

படம்
சின்ன நறுக்..... ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த துறவியும், அவரது சிஷ்யனும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போய் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் அடுத்த கரைய தாண்ட ஒரு உடைந்த பாலம் இருந்தது... "சரி வா போகலாம்.." இது குரு. "அங்க பாருங்க குருவே! யாரோ நடுவுல இருக்குற மாரி இருக்கே?" இது சிஷ்யன். குருவும் சிஷ்யன் கூறிய பக்கத்தை உற்று நோக்கினர். அப்பொழுது ஒரு அழகான பெண் அந்த பாலத்தின் நடுவில் இருந்த உடைசல்களில் மாட்டிக்கொண்டு போக முடியாமல் தவிப்பது அவர் பார்வையில் பட்டது. உடனே குரு அந்த இடத்துக்கு சென்று அந்த பெண்ணையும் தூக்கிக்கொண்டு தானும் பாலத்தை கடந்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனுக்கு ஒரே ஆச்சரியம், எங்கள் துறவற வாழ்க்கையில் பெண்களை சந்திப்பது, அவர்களை பார்ப்பது, அவர்களுடன் உரையாடுவது எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்ட பாவ செயல்களாகும், இவரோ அந்த பெண்ணை தொட்டு தூக்கி இருக்கிறாரே என சிந்தித்தான். அந்த குருவோ பாலத்தை கடந்ததும் அந்த பெண்ணை கீழே இறக்கி வைத்தவுடன், அந்த பெண் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றார். அதன் பின் குருவும் சிஷ்யனும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர

மனோ என்னும் காந்தக்குரலான்....

படம்
என்னைக் கவர்ந்த பிரபலங்கள் பார்ட் 2..... நாகூர் பாபு என்னும் இயற் பெயரைக் கொண்ட இவரை மனோ என்று பெயர் மாற்றம் செய்த பெருமை இசைஞானி இளையராஜாவே சேரும்.. 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ம் திகதி விஜயவாடாவில் பிறந்த மனோ பிறப்பிலே இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் ஆவார்.... ஆனால் இசைக்கு மொழி, மதம், இனம் என்னும் எல்லைகள் எல்லாம் இல்லை, உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களே அதற்கு சாட்சி.. தனது காந்தக்குரலின் மூலம் அனைவரையும் தன வாசம் இழுத்த இந்த மனோ என்னும் பாடகர், ஆரம்ப கால கட்டங்களில் M.S. விஸ்வநாதன் இசையமைப்பளருடன் 2 வருடங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.. சென்பகமே சென்பகமே என்ற பாடலின் மூலம் அனைத்து ரசிகர்களின் மனத்திலும் நீங்க இடம் பிடித்த மனோ, பிரபல இசையமைப்பாளர்கள் அனைவருடனும் இணைந்து இணையற்ற இசை வெள்ளத்தில் ரசிகர்களை நனைய வைத்துள்ளார்.. அந்த வரிசையில் - வேலைக்காரன் திரைப்படத்திற்காக அவர் பாடிய வா வா வா என்ற பாடல் முதலிடத்தை பெறுகிறது. முக்காலா முக்கபலா, அழகிய லைலா, அடி அனார்கலி, எந்தன் வாழ்கையின் அர்த்தம், காதோரம் லோலாக்கு, மலையாளக் கரையோரம், நீ ஒரு காதல் சங்கீதம் போன்ற பல பிரபல பாடல்களை பாடி