இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

படம்
முகப்புத்தகத்தில் வந்தாய் - விண்ணப்பம் செய்தாய்.. மற்றோருக்கு முகம் திருப்பும் நான் - சத்தமின்றி உன் விண்ணப்பத்தை ஏற்றேன்.. அரட்டைக்கு வந்தாய், ஹாய் என்றாய் - யாருக்கும் பதில் அனுப்பாத நான் உனக்கு ஹலோ என்றேன்.. எடுத்த எடுப்பிலேயே டார்லிங் என்றாய் - வெறுப்பு வர வில்லை எனக்கு உன் மேல்.. வாடி போடி என யாருமே என்னை அழைக்காத வண்ணம் உரிமையுடன் அழைத்தாய் - வேண்டாம் என்று சொல்லத்தோனவில்லை எனக்கு.. உன்னை காதலிக்கிறேன் என்றாய் - வெட்கமின்றி சம்மதித்தேன்.. கண்ணழகு, குழலழகு, சிரிப்பழகு, செவி அழகு என்றாய் - பல்லை இளித்தேன் அட பல்வரிசை கூட என்னைப்போலவே என்றாய்.. சொல்ல வார்த்தை இல்லை - உறைந்து நின்றேன்.. அன்று தான் பெண்மை எய்தியது போல் உணர்ந்தேன் - வெட்கத்தில் உடம்பு கூசியது அது நம் முதல் சந்திப்பு... அருகில் வந்து "லட்டு" என்றாய் - அந்த வார்த்தையில் ஆதிகால பெண்ணாய் மாறினேன்... உன்னை பெயர் சொல்லி அழைக்கவும் என் நா கூசியது.. என் பெயரை சொல்லுடி என்றாய் - முடியாது என்றேன்.. அடியே கிறுக்கி என்றாய் - அது கூட பிடித்தது எனக்கு.. ஆசையாய் மாமா என்றேன் - அடி என் லட்டு என்றாய்.. நேரில் சந்திக்காமலே வளர

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?

படம்
1994 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஐப்பசி மாதம் 5ம் திகதி உலகளாவிய ரீதியில் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது, என் தாய் திருநாடான இலங்கையில் 6 ம் திகதி கொண்டாடுவது வழமை. மாணவர்களுக்காக தங்களது வாழ்வையே அர்ப்பணித்த உண்மையான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இப்போது நாம் எமது பதிவிற்கு செல்லலாம். தற்கால கட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் உண்மையாகவே கற்றுக்கொடுக்க தகுதியானவர்களா? ஆசிரியர்கள் என்று பாடசாலையில் இருக்கும் பொழுது நாம் எதற்கு எமது பிள்ளைகளை பிரத்தியேக வகுப்புக்களுக்கு அனுப்புகின்றோம்? நாம் கல்வி கற்கும் கால கட்டத்தில் உயர் தரம் படிக்கும் போது மட்டுமே பிரத்தியேக வகுப்புகளுக்கு சென்றோம் ஆனால் இக்காலத்தில், 01   ம் வகுப்பிலிருக்கும் குழந்தை கூட  பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்கிறதே? எமது ஆசிரியர்கள் பட்டதாரிகள், அதை விட அனுபவம் மிக்கவர்கள், ஆனால் இப்பொழுது இருக்கும் ஆசிரியர்கள்? அவர்கள் உண்மையாகவே பட்டதாரிகள் தானா? அனுபவம் மிக்கவர்களா? இவ்வாறான கேள்விகள் அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. இதைப்பற்றி விரிவாக சிந்திக்கும் போது, தற்போது அதிகமான ஆசி