இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரசித்ததும், எழுதியதும்..

காத்திரு என்று கனவில் கூறினாய்.. நினைவில் அதை கூறி இருந்தால்.. காத்திருந்திருப்பேன் ஆயுள் முடியும் வரை.. உன் நாமத்தை பேனா முனை கொண்டு செதுக்கி, உன் உருவத்தை விழிகளால் வீடியோ பண்ணி, உள்ளத்திரையில் கலர் கனவுகளாக, மீண்டும் மீண்டும் மீட்டுக்கொண்டிருக்கிறேன், நடு நிசியில்.... இருளாய் கிடந்த என் இதயத்துள், காதல் தீபத்துடன் குடியேறிய காதலனே, என் நெஞ்சை கொழுத்தி விட்டு போவாய் என, நான் கனவிலும் கருதவில்லை... நீ இருந்த என் இதயத்தில், இன்னொருத்தனுக்கு இடம் இல்லை, என் மணவறையில் மகரந்த மணம் வீசும் - உன் நினைவுகளை அணைத்த படியே, என் ஆயுள் கழிகிறது... மெய் மறந்து நின்றேன் - உனை பார்த்த அன்று கண் கலங்கி நிற்கின்றேன் - உனக்காக இன்று கனமான காதலை சொல்ல வரும் போது ! எப்போதும் எனக்கு பேச்சற்று போகிறது ! நீயோ உன்னில் ஊரும் அன்பை - உருக்கமாக சொல்கிறாய் ! என் இதய அறையில் அக்குரல்கள் மீண்டும் மீண்டும் ஒலிக்கின்றன ! நானோ - மௌனமாக காதலை வெளிப்படுத்துகின்றேன் ! நீயோ - நான் வெறுக்கிறேன் என்று கலக்கம் அடைகிறாய் ! எப்படியாவது நானும் உன்னை காதலிப்பதை புரிந்து கொள் ! தூக்கத

உடைந்த கனவுகள் - உள்ளக்குமுறல்

படம்
உன்னை மறக்க முடியாமல் துடிக்கிறேனடி, என் உயிரில் கலந்து, பின்பு என்னை விட்டு பிரிந்து, என்னை ஒரு ஜடமாய் விட்டாயே  என் அன்பே. நாம் கண்ட கனவுகள், நம்முள் இருந்த ஏக்கங்கள், எல்லாம் ஒரு கண்ணாடி குவளை போல் உடைந்து போனதடி. உன்னை கட்டியணைக்கவும் எனக்கு கூடவில்லை, உன்னை முத்தமிடவும் எனக்கு கிட்டவில்லை, உன் கண்ணில் வழியும் கண்ணீர் துடைக்கவும் முடியவில்லை. உன் நெற்றியில் நான் முத்தம் இட வேண்டும் உன் மார்பில் நான் சாய வேண்டும், என் மடியில் நீ தூங்க வேண்டும், உனக்கு தாலாட்டு நான் பாட வேண்டும். உன்னை செல்லமாய் நான் திட்ட வேண்டும், நீ விளையாட்டாய் கோவப்பட வேண்டும், என் நெஞ்சில் சாய்ந்து பல கதைகள் நீ பேச வேண்டும். ஆனால் பெண்ணே நீ என்னை விட்டு சென்ற பின்னே எல்லாம் ஒரு கனவாய் போனதடி என் உயிர் நிலை குலைந்து, என் திசை தடம் புரண்டு, என் நா வரண்டு, நீ பிரிந்தது ஒரு கனாவாய் இருக்காதா என என் மனம் துடிக்கின்றதடி, உன்னை மறக்க முடியாமல் தவிக்கிறேனடி...