படித்ததில் பிடித்தவை... (சின்ன கடி)

வந்ததும் வராததுமா ஊரார் எழுதுனத சுட்டு போடுறேனேனு என்ன பத்தி யாரும் தப்ப பீல் பண்ணாதிங்கப்பா... முதல் முதலா ஆரம்பிக்கிரோமே அடுத்தவங்க ஆக்கத்த உட்சாகப்படுதலாமேனு ஒரு நல்லெண்ணம் தான்.. ஹி ஹி ஹி


வந்தவர்: உங்கப்பா என்ன பண்றார்?
பையன்: தூங்கிட்டு இருக்கார் சார்!
வந்தவர்: அவர் பேர் என்ன?
பையன்: உ. சுப்பு சார்
வந்தவர்: அவரைக் கொஞ்சம் உசுப்பு!



இளைஞன்: தம்மாத்தூண்டு பையன் நீ... உன்னோட போட்டி போட்டா, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? 
சிறுவன்: அதுவா....? 'உ'-வும் 'எ'-வும்தான் வித்தியாசம்!!!!



கருப்பையா: வயலுக்குள்ள என்ன சண்டை அவங்க ரெண்டு பேருக்கும்? ஒருத்தர் வாயைப் பேத்துடுவேன்கிறார்... இன்னொருத்தர் காலை ஒடச்சிடுவேன்கிறார்.....!
சுப்பையா: ஒண்ணுமில்லங்க... 'வாய்க்-கால்' சண்டைதான்!



"உங்க கடையில மருந்து வாங்கிச் சாப்பிட்டவங்க திரும்பி வர மாட்டாங்களா... ஏன்?"
"அந்த மருந்திலேயே அவங்க போய்ச் சேர்ந்திடுவாங்களே..!"



மந்திரி: மன்னா.... போர் நடக்கும் என்று நினைத்து தோண்டிய பதுங்கு குழிகளை என்ன செய்வது? அதான் போர் நடக்கவில்லையே! 
மன்னா: ப'தூங்கு' குழிகளாக மாற்றிவிடுங்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தினம் அழுது தீர்த்தும் வற்றிய பாடில்லை இந்த கண்ணீர்...

கற்பித்தல் என்பது - தொழிலா? சேவையா?

இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல்ல டா சாமி..